விரைவில் முடிய இருக்கும் ரசிகர்களின் மனம் கவர்ந்த Prime Time சீரியல் – ஹீரோ வெளியிட்ட உறுதி தகவல்!

0
விரைவில் முடிய இருக்கும் ரசிகர்களின் மனம் கவர்ந்த Prime Time சீரியல் - ஹீரோ வெளியிட்ட உறுதி தகவல்!
விரைவில் முடிய இருக்கும் ரசிகர்களின் மனம் கவர்ந்த Prime Time சீரியல் - ஹீரோ வெளியிட்ட உறுதி தகவல்!
விரைவில் முடிய இருக்கும் ரசிகர்களின் மனம் கவர்ந்த Prime Time சீரியல் – ஹீரோ வெளியிட்ட உறுதி தகவல்!

தமிழ் சின்னத்திரையில் புதுமையான கன்டென்ட் கொடுக்கும் கலர்ஸ் தமிழ் சேனலில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் “மந்திர புன்னகை” சீரியல் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அந்த சீரியல் ஹீரோ வெளியிட்டு இருக்கிறார்.

மந்திர புன்னகை சீரியல்:

சின்னத்திரையில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அதில் ஒன்று தான் கலர்ஸ் தமிழ் சேனல். இதில் புதுமையான கதையுடன் ஏகப்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியலும் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. அந்த வகையில் தற்போது ப்ரைம் டைம் சீரியல் ஒன்றின் கிளைமாக்ஸ் காட்சி எடுத்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் காதல் நாயகி – ரசிகர்களின் அதிக ஒட்டு இவருக்கு தான்!

Follow our Twitter Page for More Latest News Updates

அது என்ன சீரியல் என்றால் நெடுந்தொடராக இல்லாமல் 150 எபிசோட்களுடன் ஒளிபரப்பாகி வரும் “மந்திர புன்னகை” சீரியல் தான். இந்த சீரியலின் கதாநாயகி சமீபத்தில் மாற்றப்பட்டது முதல் சீரியல் கதையின் விறுவிறுப்பு சற்று குறைந்தது. மேலும் தொடக்கத்தில் ஒரு கிரைம் கதையை கொண்டிருந்த இந்த சீரியலில் அதன் பின் கதையில் விறுவிறுப்பு குறைவாக இருந்தது. இந்நிலையில் அந்த சீரியலின் கிளைமாக்ஸ் காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதை அந்த சீரியலின் கதாநாயகன் கதிர் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் ஹுசைன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!