ஆகஸ்ட் மாதம் கல்லூரிகள் மீண்டும் திறப்பு? மாநில அரசு திட்டம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் கல்லூரிகள் மீண்டும் திறக்க வாய்ப்பிருப்பதாகவும், மாணவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் படியும் மத்திய பிரதேச முதல்வர் அறிவித்துள்ளார்.
கல்லூரிகள் திறப்பு:
மத்திய பிரதேச மாநிலம் முழுவதும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முதல்வர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது உள்ள வேகத்திலேயே அனைவரும் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டால் கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் சினிமா அரங்குகள் போன்றவற்றை திறப்பதற்கு அரசு முடிவெடுக்கும். இதனால் விரைவில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஏனெனில் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு, அதில் கலந்து கொள்வது கட்டாய நெறிமுறையாக மாறப்போகிறது.
தமிழக ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்!
ஜூலை மாத கொரோனா நிலைமையை மறுபரிசீலனை செய்து கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றிய முடிவை அரசு எடுக்கும் என்று கூறியுள்ளார். பள்ளிகள் மீண்டும் திறப்பது மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பீடு முறை தொடர்பான முடிவுகள் ஜூன் 28ம் தேதி அன்று எடுக்கப்படும். மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட 77 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் கடுமையான வழிமுறைகளை பின்பற்றி மாநிலத்தில் கல்லூரிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.
TN Job “FB Group” Join Now
இதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் மத்திய பிரதேச கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பிற உதவி ஊழியர்கள் அனைவரும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது பெற்றிருப்பின் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஜூன் 23 அன்று நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில் கல்வியாளர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், மத்தியப் பிரதேச கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான இறுதி முடிவை முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களே அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.