ஜூன் 15 முதல் கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு முக்கிய அறிவிப்பு!
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் முடிவடையும் நிலையில் இருக்கிறது. அதன்படி இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் வகுப்புகள் துவங்கும் எனவும், அடுத்த கல்வியாண்டில் எந்தெந்த நாட்களில் வகுப்புகள் துவங்கும் என்பதற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வருடாந்திர காலண்டர்:
கொரோனா தொற்று ஓரளவுக்கு குறைந்த பிறகு தற்போது கல்லூரி, பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா தொற்றினால் காலம் தாழ்த்தி தான் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு 2022-23 கல்வி ஆண்டிற்கான வருடாந்திர காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஜூலை முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து, இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் வகுப்புகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2022-23 கல்வியாண்டில் மொத்தமாக 221 வேலை நாட்கள் வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 10 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தசரா விடுமுறை அக்டோபர் 2 முதல் 9 வரை இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு நவம்பர் 21 முதல் 26 வரை நடைபெறும் எனவும், ஜனவரி 13 முதல் 15 ஆம் தேதி வரை வாரியம் சங்கராந்தி விடுமுறை விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
WhatsApp பயனர்களுக்கு சூப்பர் அம்சங்கள் அறிமுகம் – பிரிவியூ வசதி!
அனைத்து பொதுத்தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் முடித்து விட வேண்டும் எனவும், ஏப்ரல் 1 முதல் மே 31 ஆம் தேதி வரை கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிந்து 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான கல்லூரிகள் வகுப்புகள் ஜூன் 1 ஆம் தேதி துவங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அட்டவணையின் அடிப்படையில் மட்டுமே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள், விடுமுறை என அனைத்தையும் அறிவிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.