ஆகஸ்ட் 2 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

0
ஆகஸ்ட் 2 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி - மாநில அரசு உத்தரவு!
ஆகஸ்ட் 2 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி - மாநில அரசு உத்தரவு!
ஆகஸ்ட் 2 முதல் கல்லூரிகள் திறக்க அனுமதி – மாநில அரசு உத்தரவு!

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் அங்கு கல்வி நிறுவனங்கள் திறப்பதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகள் மீண்டும் திறக்க தேவையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கல்லூரிகள் திறப்பு:

ஒடிசா மாநிலத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது. இதனால் மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள் திறப்பதற்கான ஆலோசனைகள் நடந்து வருகின்றது. இதற்கிடையில், மாநிலத்தில் 1,615 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,74,132 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 65 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,768 ஆக உள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் – ரூ.1,358 கோடி இழப்பு!

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை தொடர்ந்து கல்வி நிலையங்களை மீண்டும் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு, ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் துணை மருத்துவ மற்றும் தொடர்புடைய மருத்துவ அறிவியல் நிறுவனங்களை மீண்டும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ள பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் வர வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மருத்துவ கல்லூரிகள், கால்நடை, நர்சிங், மருந்தகம் மற்றும் பிசியோதெரபி கல்லூரிகள் போன்ற பிற கல்வி நிறுவனங்கள் சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் சுகாதார தலைமை செயலாளர் பி.கே. மொஹாபத்ரா அறிவித்துள்ளார். மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாதவர்கள் என்று மாணவர்களை செய்முறை மற்றும் வகுப்பறை வகுப்புகளில் பிரித்து நடைமுறைப்படுத்த சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

கல்லூரி வளாகத்திற்குள் கல்வி, சமூக, மத மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் கொரோனா நோய் தடுப்பு நடைமுறைகளை முழுவதுமாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!