ஜூலை 7 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்!
கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து கொண்டே வரும் நிலையில் பீகார் மாநில அரசு ஜூலை 7ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளது. மேலும் மாற்று நாட்களில் வகுப்புகளை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள் திறப்பு:
பீகாரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜூலை 7 முதல் ஒரு கட்டமாக மீண்டும் திறக்கப்படும். எவ்வாறாயினும், மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமாக இருக்காது, மேலும் மாணவர்கள் தன்னார்வ அடிப்படையில் ஆஃப்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவர். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் மாநில கல்வித்துறையால் தயாரிக்கப்பட்டு ஜூலை 6 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆன்லைனில் டவுன்லோட் செய்யும் முறை!
மாற்று நாட்களில் வகுப்புகளில் 50 சதவீத மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆஃப்லைன் வகுப்பறைகளில் கலந்துகொள்ள மாணவ, மாணவிகளை அனுமதிக்கும் பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் கட்டாயமாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வகுப்பறைகளில் மாணவர்களிடையே சமூக இடைவெளியை பராமரித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
கல்வி அமைச்சக வட்டார தகவல்களின் படி, ஆஃப்லைன் வகுப்புகளுடன் ஆன்லைன் வகுப்புகளையும் தொடர பீகார் அரசு பரிசீலித்து வருகிறது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வகுப்புகள் ஒரே நேரத்தில் இயங்கும், மேலும் இதில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்ய பெற்றோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மார்ச் 2020 முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.