மாநிலம் முழுவதும் பிப்.16 வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை – ஹிஜாப் விவகாரம் எதிரொலி!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் முதல் அதிக பதற்றத்தை ஏற்படுத்திய ஹிஜாப் தொடர்பான விஷயத்தில் உயர்நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்காத நிலையில், பிப்ரவரி 16ம் தேதி வரை அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஹிஜாப் விவகாரம்:
தனி மனித சுதந்திரத்தை ஒடுக்கும் வகையிலும், நாட்டின் இறையான்மையையும் கேள்விக்குறியாகும் வகையிலும், கர்நாடகா மாநிலத்தின் அரசு கல்லூரி ஒன்றில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பறைக்குள் வரக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்து பெண்கள் ஹிஜாப் தங்கள் உரிமை என்பதை தெரிவிக்கும் வகையில் போராட்டத்தை நடத்தினார்கள். பெண்களின் இந்த ஹிஜாப் உரிமை போராட்டம் நாட்டை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. தற்போது இந்த விஷயத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தில் பிப்.15க்கு பிறகு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு? முதல்வர் இன்று ஆலோசனை!
விரைவில் ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் தீர்ப்பு அறிவிக்கப்படாமல் உள்ளது. இதனால் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் முழுவதும் பதற்றம் நீடித்து வருகிறது. அந்த பதற்றத்தை குறைக்கும் வகையில் மாநில காவல்துறையினர் உடுப்பி மாவட்டம் சித்திர துர்கா உள்பட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும், சில நாட்களுக்கு முன்பாக மாந்தியாவில் இந்துத்துவா மாணவர்களின் போராட்டத்தின் போது அல்லாஹு அஃபர் என முழக்கமிட்ட மாணவி முஸ்கானை நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து பாராட்டி வருகின்றனர்.
மாநிலத்தில் இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!
இப்படியான பதற்றம் நீடித்து வருவதால் முன்னதாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் கடந்த 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டது. தற்போது இன்னும் தீர்வு எட்டப்படாத நிலையில் தொடர்ந்து கல்லூரிகளுக்கு 16-ம் தேதி வரை விடுமுறையை கர்நாடக அரசு நீட்டித்துள்ளது. தொடர்ந்து 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பியூ கல்லூரி விடுமுறை குறித்து அரசு தரப்பில் எந்த வித பதிலும் அளிக்கப்படவில்லை. ஆனால் முன்னர் அறிவித்த படி 14ம் தேதியான திங்கட்கிழமை முதல் 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.