கல்லூரிகள் மீண்டும் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்!
கர்நாடகா மாநிலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்ட பின்னர் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று துணை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான சி.என். அஸ்வத் நாராயண் இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
கல்லூரி திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும், சில இடங்களில் ஆன்லைன் வழியிலும் தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது பல மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இருப்பினும், உடனே கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டால் மீண்டும் தொற்று அதிகம் பரவும் அபாயம் உள்ளது. இந்நிலையில், கர்நாடக துணை முதல்வரும் உயர்கல்வி அமைச்சருமான சி.என். அஸ்வத் நாராயண் அவர்கள் இன்று ஹப்பல்லி யில் செய்தியாளர்களை சந்தித்தார்.
8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை – கொரோனா பரவல்!
அப்போது, கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து கர்நாடக அரசு ஒரு முடிவும் எடுக்கவில்லை. கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறப்பது சவால்கள் நிறைந்த பணியாகும். நாங்கள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் கல்லூரிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளோம். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின்னர் கல்லூரிகள் தொடங்கப்படும்.
TN Job “FB Group” Join Now
தடுப்பூசி போடும் பணியை அரசு புறக்கணித்துள்ளதாக எழுந்துள்ள புகார்கள் பொய்யானதாகும். ஒரு புறம் தடுப்பூசி செலுத்தும் பணிகளுடன், மறுபுறம் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைகளை நாங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அரசு மருத்துவமனைகளில் 6,000 க்கும் மேற்பட்ட படுக்கைகள் COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது. இதற்காக 2,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், துணை மருத்துவ பணியாளர்களையும் நியமித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.