முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு செப்.20 முதல் கல்லூரிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு வருகிற செப்டம்பர் 20ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக மாநில அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
கல்லூரிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா 2வது அலையை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படாமல் மாநில வாரியாக பாதிப்பு நிலவரத்துக்கு ஏற்ப பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதில் தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைவதை கருத்தில் கொண்டு தளர்வுகள் வழங்கப்பட்டு வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில் ஒடிஷா மாநில அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை செப்டம்பர் 20, 2021 முதல் மீண்டும் திறக்க ஒப்புதல் வழங்கி உள்ளது.
தமிழகம் முழுவதும் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை!
முதல் ஆண்டு இளங்கலை (யுஜி) மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து கோவிட் -19 பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றி உயர்கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட உள்ளன. மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும், சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். சுற்றுப்புறங்களை முறையாக சுத்தம் செய்வதை உறுதி செய்வது கல்லூரி நிர்வாகத்தின் பொறுப்பாகும்.
செப்.20ம் தேதி 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு, இரவு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
இது தொடர்பான விரிவான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் விரைவில் வழங்கப்படும். மாணவர்களின் வருகை கட்டாயமாக்கப்படாது மற்றும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பாதவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கல்லூரி வளாகத்தை அடைந்தவுடன் சாதாரண உடல் வெப்பநிலை இருப்பதை உறுதி செய்ய வெப்ப பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.