பிப்.14 முதல் உயர்நிலை பள்ளிகள் மட்டும் திறப்பு, கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வர் உத்தரவு!
கர்நாடகா மாநிலத்தில் கடந்த வாரம் முதல் ஹிஜாப் மற்றும் காவி உடை அணிந்து வகுப்பறைகளில் வருவதற்கு நடத்தப்பட்ட போராட்டங்களின் விளைவால் பிப்ரவரி 8 முதல் 10 ஆம் தேதி வரை கர்நாடகா முழுவதும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டது.
பள்ளிகள் திறப்பு:
ஹிஜாப் அணிந்த பெண்களை வகுப்பறைக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், வகுப்பறைகளுக்கு காவி உடை அணியுமாறு வலியுறுத்தியதால், கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வந்த காரணத்தால் பிப்ரவரி 8 முதல் 10 ஆம் தேதி வரை கர்நாடகா முழுவதும் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டது. பிப்ரவரி 14ம் தேதியான திங்கள்கிழமை முதல் மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளையும் திறக்க மாநில அரசு வியாழக்கிழமை முடிவு செய்துள்ளது.
பிப்ரவரி 20ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசு உத்தரவு!
ஆனால் அனைத்து முன் பல்கலைக்கழக மற்றும் பட்டயக் கல்லூரிகளும் பின்னர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் மீதான அடுத்த விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒத்திவைத்துள்ள நிலையில், பியு மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகளைத் திறப்பது குறித்து மாநில அரசு பின்னர் முடிவெடுக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ், உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்குப் பின், முதல்வர் அறிவிப்பை வெளியிட்டார்.
IPL 2022: மெகா ஏலத்தில் கேப்டனை தேடும் 3 அணிகள் – ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு!
அதில், பள்ளி, கல்லூரி வளாகங்களில் தற்போது அமைதியும் நல்லிணக்கமும் நிலவுவதாகவும், கடந்த இரண்டு நாட்களாக எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார். அமைதியைக் காக்க, கல்லூரி வளாகங்களில் மத அடிப்படையிலான ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகளைத் திறப்பது குறித்தும் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் அறிவித்தது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை கமிஷனர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அலுவலர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் தானும் அனைத்து அமைச்சர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிப்படை உண்மைகளை ஆய்வு செய்ய உள்ளதாக திரு.பொம்மை கூறினார்.