தமிழகத்தில் பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் வகுப்புகள் – அறிவிப்பு வெளியீடு!
இந்தியாவில் பொறியியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவக்க அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இறுதிச்சுற்றுக் கலந்தாய்வினை ஜூலை 20 ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
நேரடி வகுப்பு:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்றது. மேலும் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாகவே நடத்தப்பட்டது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலால் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் ஆன்லைன் வகுப்புகளே தொடர்ந்துநடைபெற்றது. இந்த நேரத்தில் சுகாதாரத்துறையின் அறிவுத்தலின் பேரில் அரசு மேற்கொண்ட முயற்சிகளினால் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து கடந்த வருட இறுதியில் பள்ளி , கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட தொடங்கியது.
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – பாடத்திட்டம், தேர்வு முறை!
இந்த நேரத்தில் கொரோனா மூன்றாம் அலை வேகமெடுத்தது கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நேரடி முறையில் நடத்த திட்டமிடப்ப்பட்டிருந்த நிலையில் ஓமிக்ரான் பரவலால் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியவில்லை. இந்த நிலையில் 2022-23 ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளுகான இறுதிச்சுற்றுக் கலந்தாய்வினை ஜூலை 20 ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடர வேண்டும் என்றும் தொழில் நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வரும் கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் நேரடியாகவும் வகுப்புகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் முறையான அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை செய்துள்ளது.