நவம்பரில் கல்லூரிகள் திறப்பு – முதலமைச்சர் உத்தரவு !!
கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டு இருந்த கல்லூரிகளை வரும் நவம்பர் 17 ஆம் தேதி முதல் திறக்க கர்நாடக மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் மூலமாகவும் பாடங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கல்லூரிகள் மூடல் :
கொரோனா நோய் தொற்றின் பரவல் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அனைத்து கல்லூரிகள், பள்ளிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஆனது ரத்து செய்யப்படுவது மற்றும் முன்னதாக நடத்தப்படுவது போன்று ஒவ்வொரு மாநிலத்தில் நடவடிக்கைள் துரிதமாக எடுக்கப்பட்டது. கொரோனா பரவலும் தீவிரமாக இருந்து வந்ததால் எந்த மாநில அரசும் கல்லூரிகள் திறப்பு குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
அடுத்த கல்வி ஆண்டு தோற்ங்கி வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்து வந்ததால் மத்திய அரசு கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்தது. கூடுதலாக அதில் மாநில அரசு தங்களது மாநிலங்களில் நிலவும் சூழலை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறந்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
கல்லூரிகள் திறப்பு தேதி !
அந்த வகையில் தற்போது கர்நாடகா அரசும் கல்லூரிகளை திறக்க அனுமதி அளித்துள்ளது. இந்த செய்தியினை அம்மாநில முதல்வர் எடியூரப்பா உறுதி செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “நவம்பர் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படலாம். மாணவர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் கல்லூரிகளுக்கு வந்தாலும், ஆன்லைன் மூலமாகவும் வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம். கல்லூரிகள் மாணவர்களை கட்டாயப்படுத்தி கல்லூரிகளுக்கு வரவழைக்க கூடாது” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்