கல்லூரிகளை திறக்க மாநில அரசு உத்தரவு !!!
நாடு முழுவதும் கல்லூரிகள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 50% மாணவர்களுடன் இயக்கிக்கொள்ள தற்போது அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
கொரோனா பரவல் !
இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்போது வரை 7 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. பல மாநிலங்களில் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. தற்போது வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் கல்லூரி திறப்பின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கல்லூரிகள் திறப்பு !
பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு, கல்லூரிகளை திறப்பது அந்தந்த மாநில தொற்றின் நிலையினை பொறுத்தது என்பதனால், அதனை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டு இருந்தது. இந்த அறிவிப்பினை பரிசீலித்து முடிவு அறிவிக்கப்படும் என உத்திர பிரதேச மாநில உயர்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி தற்போது மாநிலம் முழுவதும் நவம்பர் 23ம் தேதி முதல் கல்லூரிகளை திறந்து கொள்ள அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் கல்லூரியில் 50% மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |