பிப்.14 (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கோவா மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாநில அரசு அறிவிப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா எதிரொலியாக தொற்று பாதித்த மாநிலங்களில் கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. இதனால் மாணவர்களின் நேரடி கற்றல் முறை பாதிக்கப்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் கொரோனா 3வது அலையின் தாக்கம் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த வகையில் மாணவர்களும் பள்ளிக்கு ஆர்வமாக சென்று வருகின்றனர்.
ஆதார் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – தவறாக பயன்படுத்தினால் ரூ.1 கோடி அபராதம்!
இந்நிலையில் கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் தேர்தல் பணிகள் பல்வேறு விதிமுறைகள் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தேர்தல் நாளன்று மாநிலம் முழுவதும் அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி,கல்லூரிகளுக்கு 14ம் தேதி அன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு..!
இந்த வகையில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த அறிவிப்பை நிறுவனங்கள் தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அறிவிப்பு ஊழியர்களிடையே அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.