கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு – முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 29 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ளது.
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை:
புதுச்சேரியில் பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடந்த ஜூலை 8 முதல் சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் உயர்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 ஆம் தேதி கடைசி தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
TN TRB 1,060 விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி! அதிர்ச்சி தகவல் வெளியீடு!
ஏற்கனவே 10 ஆயிரத்து 804 இடங்கள் இருந்த நிலையில் மாணவர்கள் விண்ணப்பிக்கும் அளவை பொறுத்து கூடுதல் இடங்கள் கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் பிற மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் நீட் அல்லாத படிப்புகளுக்கு மற்ற மாநில ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்கலாம் எனவும், என்ஆர்ஐ, பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
அதன் படி புதுச்சேரி பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க ஜூலை 29 ஆம் தேதி கடைசி நாள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூலை 29 வரை கால அவகாசம் நீடிக்கப்பட இருப்பதாக கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே மாணவர்கள் விரைந்து சென்று விண்ணப்பிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தி உள்ளது.