நாளை (டிச.,30) உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
நீலகிரி மாவட்டத்தில் நாளை ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
நீலகிரி:
நீலகிரி மாவட்டமானது தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். உலகம் முழுவதும் இருந்து மக்கள் இங்கு உள்ள மலைகளின் அழகை ரசிக்க சுற்றுலாவிற்கு வருவார்கள். விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
742 கணினி ஆசிரியர்களின் தேர்வு பட்டியல் வெளியீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்!!
இங்கு பழமையான இனத்தை சேர்ந்த படுகர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் குல தெய்வமான ஹெத்தை அம்மன் கோவில் அங்கு மிக பிரபலம். இந்நிலையில் ஹெத்தை அம்மன் கோவில் பண்டிகை டிசம்பர் 30ம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகையை மக்கள் மிகவும் விமரிசையாக நடத்துவார்கள். இப்பண்டிகை நாளை நடைபெற இருப்பதால் நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் நாளை (30.12.2020) உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கடந்த வாரமே உத்தரவிட்டிருந்தார். இதனால் நாளை அங்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதற்கு மாற்றாக ஜனவரி 9ம் தேதி வேலை நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்