பம்பையில் 6000ஐ தாண்டிய கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் – அதிகரிக்கும் நோய் அபாயம்!!
சபரிமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கமாகும். தற்போது இந்த பம்பை நதியில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும். இதனை தடுக்கும் விதமாக அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோலிஃபார்ம் பாக்டீரியா
கேரள மாநிலத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். இக்கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் இங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கமாகும். மேலும் இங்கு பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தும் வருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு – டோக்கன் வழங்கும் பணி தீவிரம்!
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், பம்பை நதியில் கோலிஃபார்ம் என்கிற பாக்டீரியாக்கள் குறிப்பிட்ட அளவை விட அதிகரித்து இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நதியில் இருக்கும் கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் அளவு வாரத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்யப்படும். இந்த கோலிஃபார்ம் என்பது மொத்த பாக்டீரியாக்களின் தொகுப்பாகும். இதன் அளவு 500க்கு மிகாமல் இருந்தால் தான் நதி நீரில் குளிக்க இயலும்.
ஆனால் தற்போது பரிசோதனை மேற்கொண்டதில் கோலிஃபார்ம் பாக்டீரியாக்கள் எண்ணிக்கை 6000-ஐ தாண்டியுள்ளது. இந்த நீரில் குளிப்பதால் டைபாய்டு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அத்துடன் பக்தர்கள் நதியில் ஆடைகளை விட்டு செல்வது இந்த பாக்ட்ரியாக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த பாக்டீரியாக்களை கட்டுப்படுத்த குள்ளார் அணையிலிருந்து பம்பை நதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது