கோவை மாவட்ட ஆட்சியர் முக்கிய உத்தரவு – பொதுமக்கள் கவனத்திற்கு!
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகும், தொடர்ந்து தீவிரமாக கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. அதன் பின்னரும், தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிக அளவிலேயே இருந்த காரணத்தால் மே 24ம் தேதி முதல் தீவிரமாக தளர்வுகளற்ற ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. தீவிர ஊரடங்கின் விளைவால் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் குறைந்தது. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மேற்கு பகுதி மாவட்டங்கள் உட்பட 11 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக இருந்தது.
முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு? முக்கிய அறிவிப்பு இன்று வெளியீடு!
இதனால் அரசு அதற்கு பிறகு அறிவித்த ஊரடங்குகளில் இந்த மாவட்டங்களுக்கு அதிகளவில் தளர்வுகளை அளிக்கவில்லை. தற்போது ஜூன் 21ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சில தளர்வுகளை அரசு அளிக்க உள்ளதாக தெரிகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நேற்று அதிரடி ஆய்வு செய்தார். அங்கு புதிதாக கட்டிவரும் கட்டிடங்களை குறித்தும், கொரோனா சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
TN Job “FB Group” Join Now
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, கோவை மாவட்டத்தில் கடந்த மாதம் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது அதிரடியாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தாலும், கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை மாவட்டத்தில் 7 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பூஞ்சை நோயால் இறந்தவர்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.