கோயம்புத்தூர் கூட்டுறவுச் சங்க வேலைவாய்ப்பு 2020 !
கோயம்புத்தூர் மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமயனம் மூலம் நிரப்புவதற்காக இந்திய குடியுரிமையுடைய ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | கோயம்புத்தூர் கூட்டுறவுச் சங்கம் |
பணிகள் | உதவியாளர் |
மொத்த பணியிடங்கள் | 136 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.06.2020 |
காலிப்பணியிடங்கள்:
கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் 136 உதவியாளர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் (அதாவது 01.01.2002 அன்றோ அதற்கு முன்னரோ பிறந்தவராக இருக்க வேண்டும்).
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு (Any Degree) (10+2+3 முறையில்) மற்றும் கூட்டுறவுப் பயிற்சி மற்றும் கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250/-ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பங்களை 15.06.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பிக்க வேண்டும்.
Madathukulam