ரூ.77,000/- ஊதியத்தில் கப்பல் தளத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Junior Technical Assistant, Store Keeper பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கொச்சி ஷிப்யார்ட் நிறுவனத்தில் Junior Technical Assistant, Store Keeper பணிக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Diploma in Electrical Engineering அல்லது Graduate, Post Graduate Diploma பதவிக்கு தகுந்தாற்போல் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
- Junior Technical Assistant (Electrical) பணிக்கு Ship Building / Ship Repair Company / Marine related Engineering Company / Engineering Company / Government / Semi Government Company ல் குறைந்தது 4 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.23,500/- முதல் ரூ.77,000/- வரையும் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம்.
- SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது என்றும், இவர்களைத் தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.400/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
TNPSC Coaching Center Join Now
- விண்ணப்பதாரர்கள் Objective type Online test, Descriptive type Online Test மற்றும் Merit List மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 10.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.