விரைவில் சந்தையில் அறிமுகமாகும் Coca Cola ஸ்மார்ட் ஃபோன் – மக்கள் ஆர்வம்!
உலகின் பிரபலமான குளிர்பான நிறுவனமான Coca Cola நிறுவனம் தற்போது புதிய பரிமாணம் எடுத்துள்ளது. அதாவது Coca Cola நிறுவனம் ஸ்மார்ட் ஃபோன்களை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது
Coca Cola நிறுவனம்
உலகளவில் பிரபலமான குளிர்பானங்களில் ஒன்றாக Coca Cola இருக்கிறது. இந்நிலையில் Coca Cola நிறுவனம் தற்போது புது முயற்சியை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் கோகோ கோலா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புது முயற்சிக்காக கோகோ கோலா நிறுவனம் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனத்துடன் இணைய இருப்பதாகவும், மேலும் மார்ச் மாதம் முதல் இந்த ஸ்மார்ட்போன் சந்தையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக விவசாயிகளுக்கான நலத்திட்டம் – ஒரு ஏக்கருக்கு ரூ. 400 மானியம்! பயனடைய வேண்டுகோள்!
மேலும் இந்த புது ஸ்மார்ட் போன் எப்படி இருக்கும் என்பது குறித்த மாடல் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது. அதில் ரியல்மி 10 4ஜி போன் மாடல் போல இருக்கிறது. Coca Cola ஸ்மார்ட் ஃபோன் பின்புறம் இரட்டை கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ், வலது புறத்தில் வால்யும் button, வளைந்த எட்ஜ்கள் உள்ளன. ஸ்மார்ட்போனை சுற்றி சிவப்பு நிறத்தில் இருக்கின்றன. கோகோ கோலா நிறுவனத்தின் இந்த புதிய முயற்சி மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.