தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாணவர்கள் தயார்!
தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகள் செல்ல தயார் செய்யும் விதமாக சோழிங்கநல்லூரில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்-1ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகள் மற்றும் பாதிப்புகள் இருந்தாலும் அதனை எல்லாம் கடந்து தற்போது நல்ல முறையில் பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது 15 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. அதனால் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு சில நாடுகளில் மட்டும் கொரோனா தடுப்பு பணியின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. அதனால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. கடைகள், உணவகங்கள், தியேட்டர்கள் மற்றும் கோயில்கள் என அனைத்திற்கும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி தொடக்கப் பள்ளிகள் திறப்பது தொடர்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து வரும் நவ-1 ம் தேதி முதல் தொடக்கப்பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல்வேறு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக இருந்து வருகிறது. எனினும் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்று அவர்கள் என்ன புரிந்து கொள்வார்கள் என்று மக்களிடம் குழப்பங்கள் எழுந்துள்ளன. ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்றிருந்தாலும் கூட அவற்றில் மாணவர்கள் பெரிய ஆர்வம் காட்டி கவனித்து வரவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மையே. இதில் 5 ம் வகுப்பு வரை பயின்ற குழந்தைகள் அனைவரும் தற்போது தங்களது ஆரம்பநிலைக்கு வந்துவிட்டனர். அதாவது எழுத்து வகைகள் மற்றும் எழுதும் முறை போன்றவைகளை மறந்துவிட்டனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மீறினால் உரிமம் ரத்து! அரசு உத்தரவு!
அதனை நினைவுபடுத்தும் வகையில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள இளைஞர்கள் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை, ஈஞ்சம்பாக்கம், பெத்தேல்நகரில் உள்ள தசரதன் என்பவர் வீட்டில் நுாலகம் வைத்துள்ளார். அங்கு காலை 9 மணி முதல் 11 மணி வரை 8 ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எழுத்து உள்ளிட்ட பல பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனால் மாணவர்கள் தயக்கமின்றி பள்ளிகள் செல்ல உதவியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம். பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை இலவச டியூசன் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இத்தகைய முயற்சியை தமிழகம் முழுவதும் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். இளைஞர்கள் நினைத்தால் எதுவும் சாத்தியமே.