தமிழக ரேஷன் கடை விற்பனையாளர்களை எச்சரிக்கும் கூட்டுறவுத்துறை – இனி போலி பில் போட முடியாது!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அவ்வப்போது பல்வேறு வழிகளில் மோசடி நடைபெற்று வருகிறது. இதனை தடுப்பதற்கு கூட்டுறவுத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் குறைந்த விலையில் ரேஷன் கடைகளின் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் அவ்வப்போது முறைகேடுகள் ஏற்படுவது அதிகரித்து கொண்டே வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதில் குறிப்பாக ரேஷன் கடைகளில் பொருட்களை பெற்று கொண்டு கள்ள சந்தைகளில் அதிக லாபத்திற்கு விற்பது மற்றும் அரிசி முட்டைகளை மற்ற மாநிலங்களுக்கு கடத்தி செல்வது அதனை மீண்டும் மற்ற கடைகளில் அதிக விலைக்கு விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. இது போன்ற முறைகேடுகளை அடுக்கடுக்காக சொல்லி கொண்டே இருக்கலாம்.
தமிழக பள்ளி ஆசியர்களுக்கு பணி நிரவல் கலந்தாய்வு – பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை!
Exams Daily Mobile App Download
இது போன்ற முறைகேடுகளை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறை அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷனில் பொருட்கள் வாங்காமல் இருக்கும் சமயத்திலும், அவர்கள் வாங்கியதாக அவர்களின் மொபைல்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. அதனால் இது போன்ற போலி பில் போடும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அனைத்து விற்பனையாளர்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.