சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனத்தில் மாதம் ரூ.1,50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Chief Vigilance Officer (CVO),General Manager, Additional General Manager பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CMRL |
பணியின் பெயர் | Chief Vigilance Officer(CVO),General Manager,Additional General Manager |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CMRL காலிப்பணியிடங்கள்:
CMRL நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இதில் Chief Vigilance Officer(CVO),General Manager,Additional General Manager பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
CMRL வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்த பட்சம் 45 முதல் அதிகபட்சம் 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் ரூ.62,000/- சம்பளத்தில் அரசு வேலை!
CMRL கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Marketing / Finance / Civil / Mech / ECE / EEE பாடப்பிரிவில் degree / MBA / B.E / B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
CMRL ஊதிய விவரம்:
General Manager,Additional General Manager பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,50,000/- முதல் ரூ.2,25,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
CMRL தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் interview / medical examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
CMRL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்ப படிவத்தின் நகல் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.