தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? வேகமெடுக்கும் ஓமிக்ரான்! முதல்வர் இன்று ஆலோசனை!
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஓமைக்ரான் பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா இரண்டாம் அலை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக அரசு மாநில அளவில் முழு ஊரடங்கை அறிவித்தது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. இதன் விளைவாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. இந்த நிலையில் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வந்த நிலையில் தற்போது அடுத்த தாக்குதலாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் தொற்று வேகமெடுத்து வருகிறது.
மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – அகவிலைப்படி உயர்வு! சூப்பர் அறிவிப்பு!
அதனால் தமிழகத்தில் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 18 வயதிற்கு மேற்பட்டோர் விரைந்து தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தவர்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. வெளி நாடுகள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது வரை தமிழகத்தில் 34 பேருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 சிறப்பு ரயில்கள் – ஜன.12 முதல் இயக்கம்!
அதனால் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய உள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதையடுத்து கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசு ஓமைக்ரான் பரவலை தடுக்க இரவு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளும் விதிக்க அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.