தமிழக நிதித்துறைக்கு புதிய வலைதளம் அறிமுகம் – முதலமைச்சர் தொடங்கி வைப்பு!

0
தமிழக நிதித்துறைக்கு புதிய வலைதளம் அறிமுகம் - முதலமைச்சர் தொடங்கி வைப்பு!
தமிழக நிதித்துறைக்கு புதிய வலைதளம் அறிமுகம் - முதலமைச்சர் தொடங்கி வைப்பு!
தமிழக நிதித்துறைக்கு புதிய வலைதளம் அறிமுகம் – முதலமைச்சர் தொடங்கி வைப்பு!

தமிழகத்தின் பொது துறையின் செயல்பாடுகளை கண்காணிக்க மற்றும் விதிமீறல்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய வலைதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதனை இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.

நிதித்துறை

தமிழ்நாட்டில் தற்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்நிறுவனங்கள் மூலமாக அரசுக்கு ரூ.1,00,000 கோடிக்கும் மேற்பட்ட வருவாய் கிடைக்கிறது. இந்நிறுவனத்தில் பல இலட்சக்கணக்கான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது அரசு நிதித்துறை நிறுவனங்களை கண்காணிக்கும் வகையில் http://ccfms.tn.gov.in என்ற புதிய வலைதளம் ஒன்று நிதித்துறை சார்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் மூன்றாவது முறையாக மதுபான கடைகள் மூடல்? அரசு பரிசீலனை!

Follow our Instagram for more Latest Updates

இதனை தமிழக முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த புதிய வலைதளம் மூலமாக நிதித்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள், ஆண்டு அறிக்கை, இயக்குனர்களின் நியமனம், இயக்குனர்களின் குழு கூட்டம் ஆகிய பல்வேறு தகவல்களை பெற முடியும்.

மேற்கண்ட செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு ஏதேனும் விதிமுறை மீறல்கள் இருப்பின், விதி மீறிய நிறுவனங்களின் இயக்குனர்களுக்கு குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக தகவல்கள் அனுப்பப்பட்டு சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தின் மூலம் பல்வேறு வகையான தகவல்களை ஒரே இடத்தில் பெறுவதன் மூலம் அரசால் பயனுள்ள முடிவுகளை விரைவில் எடுக்க முடியும் என கூறப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!