ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு – முதல்வர் அறிவிப்பு!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்பவருக்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 3 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 கோடி ரூபாய் பரிசு:
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது முதலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், கள பணியாளர்களும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்தப்பட்டு வந்தது. மேலும் 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 18 ஆயிரம் விளையாட்டு வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 10,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றால் ரூ.3 கோடி பரிசு – முதல்வர் அறிவிப்பு!
இந்த தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக விளையாட்டு வீரர்கள் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு அரசின் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தமிழக வீரர்கள் 6 பேருக்கு தலா 5 லட்ச ரூபாயை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
விளையாட்டு வீரர்கள் அடுத்த தலைமுறைக்கு ஊக்கம் அளிக்க கூடியவர்கள். விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வெல்லும் தமிழக வீரருக்கு மாநில அரசு சார்பில் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். வெள்ளி பதக்கம் வெல்வோருக்கு 2 கோடி ரூபாயும், வெண்கலம் வெல்பவருக்கு 1 கோடி ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.