தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – முதல்வர் விரைவில் அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 28% மாக உயர்த்தி கொடுக்கப்படும் என அறிவிப்புகள் வெளியான நிலையில் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வழங்குவது தொடர்பாக முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு
ஒவ்வொரு ஆண்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தவிர கூடுதல் சலுகையாக கொடுக்கப்பட்டு வரும் அகவிலைப்படி தொகையானது கடந்த ஆண்டு முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதாவது கொரோனா பேரலை காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி தொகையானது கடந்த 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 11% உயர்த்தப்பட்டு 28% மாக கொடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அபுதாபியில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
இதன் மூலம் 48,34,000 மத்திய அரசு ஊழியர்களும் 65,26,000 ஓய்வூதியதாரர்களும் பயனடைய உள்ளனர். இதற்கிடையில் தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி குறித்து உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், புதிய அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த நடைமுறையை பின்பற்றி தமிழக அரசு ஊழியர்களுக்குமான அகவிலைப்படி குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்து அரசு ஆசிரியர்கள், ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு முக்கிய முடிவு எடுப்பார்’ என கூறியுள்ளார். இது தொடர்பாக அரசு ஊழியர் சங்க தலைவர் மு.அன்பரசு கூறுகையில், ‘மத்திய அரசு அறிவித்துள்ள அகவிலைப்படி உயர்வு கணக்கீடுகளை தமிழக அரசு பின்பற்றி வருவதால், இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்த்துள்ளோம். இந்த அறிவிப்பு இன்னும் 10 நாட்களுக்குள் வெளியாகலாம்’ என தெரிவித்துள்ளார்.