தமிழகத்தில் அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மூடல் – அரசு உத்தரவு!!
தமிழகத்தில் அரசிடம் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வரும் அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மூடப்படும் பள்ளிகளின் விவரங்களை தமிழக அரசிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகள்:
தமிழகத்தில் அரசிடம் அங்கீகாரம் பெறாமல் பல தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் கல்வித்திறன் வெகுவாக பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. எனவே இதுகுறித்து தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தமிழகத்தில் 2020-21 ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்பரவல் காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது.
கடையில் வாங்கும் பொருள் காலாவதியாகி இருந்தால் செய்ய வேண்டியது என்ன?
இதனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வழிக்கல்வி நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டும் வருகிறது. இதை அடுத்து தமிழக அரசு அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் குறித்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழக அரசின் அங்கீகாரம் இன்றி செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அவர்கள் மாற்று பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பெற்றோர்கள் மத்தியில் வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் அங்கீகாரம் இன்றி மூடப்படும் பள்ளிகள் குறித்த விவரங்களை தமிழக அரசிடம் கொடுக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.