நாடு முழுவதும் பள்ளிகள் மூடல், ஊழியர்களுக்கு WFH அமல் – அரசு தீவிர நடவடிக்கை!
தற்போது பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.420 என்ற அளவில் எப்போதும் இல்லாத வகையில் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனுடன் நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இப்போது முழுமையாக மூடப்பட்டுள்ளன.
பொருளாதார நெருக்கடி
நாட்டின் மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையில் நேற்று (ஜூன்.24) முதல் பெட்ரோல் விலையை 24.3 சதவீதம் அதாவது 82 ரூபாய் வரைக்கும், டீசலின் விலையை 38.4 சதவீதம் அதாவது 111 ரூபாய் வரைக்கும் அரசு உயர்த்தி இருக்கிறது. இப்போது, எரிபொருட்களின் விலையை உயர்த்துவதற்கான முடிவை எரிபொருள் நிறுவனமான இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்துள்ளது. இந்த புதிய உயர்வு மூலம், அதிகம் பயன்படுத்தப்படும் Octane 92 பெட்ரோல் லிட்டருக்கு ரூ.420 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.400 ஆகவும் இருக்கும். இது வரலாறு காணாத உயர்வாகும்.
Exams Daily Mobile App Download
இதற்கு முன்னதாக, சமீபத்திய மாதங்களில் எரிபொருள், எரிவாயு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கட்டணத்தைச் செலுத்த முடியாமல் இலங்கை அரசாங்கம் திணறி வந்தது. இது குறித்து இலங்கை பெட்ரோலியத்துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர கூறுகையில், ‘எரிபொருள் விலை இன்று அதிகாலை 3 மணி முதல் திருத்தப்படும். அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் விலைச்சூத்திரம் விலைகளை திருத்துவதற்கு பயன்படுத்தப்பட்டது. விலை திருத்தம் இறக்குமதி, இறக்குதல், நிலையங்களுக்கு விநியோகம் மற்றும் வரி ஆகியவற்றில் ஏற்படும் அனைத்து செலவுகளையும் உள்ளடக்கியது.
திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோருக்கு ஹாப்பி நியூஸ் – நாளை முதல் சிறப்பு டோக்கன்கள்!
லாபம் கணக்கிடப்படவில்லை. மேலும், போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை அதற்கேற்ப திருத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஃபார்முலா ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் பயன்படுத்தப்படும். இப்போது எரிபொருளின் பயன்பாட்டைக் குறைக்கவும், எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கவும் வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்படும்’ என்று கூறியுள்ளார். இதற்கிடையில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு மத்தியில் பள்ளிகள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அதிகாரிகள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.