தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்? அமைச்சர் விளக்கம்!

0
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் மூடல்? அமைச்சர் விளக்கம்!

ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி நாளை முதல் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மருத்துவமனைகளை மூட நடவடிக்கை:

ஈரோடில், 16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை மற்றும் பாலியல் பலாத்கார விவகாரம், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை கண்டு வருகிறது. சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, புரோக்கர் மாலதி, போலி ஆதார் அட்டை தயாரித்து பெயர், வயது மாற்றம் செய்த ஈரோடு, பாரதிபுரத்தைச் சேர்ந்த ஜான் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

இது குறித்து சென்னை, தேனாம்பேட்டையில் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார். அதாவது, சிறுமியின் உண்மையான பெயர், வயதை மறைத்து கருமுட்டை தானம் பெறப்பட்டுள்ளது. அடையாளத்திற்காக பெறப்பட்ட ஆதார் அட்டை போலியாக உள்ளது. போலியான ஆதார் அட்டை என தெரிந்தும் மருத்துவமனைகள் பயன்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் அண்டை மாநிலங்களுக்கும் தொடர்பு உள்ளது. திருப்பதி, திருவனந்தபுரம் மருத்துவமனைகளை சேர்ந்த டாக்டர்கள் இதற்கு உடந்தையாக இருந்ததாக தெரிய வருகிறது. இதையடுத்து விசாரணைக்கான ஆவணங்களை மருத்துவமனைகள் முறையாக கொடுக்கவில்லை. மேலும் இந்த கருமுட்டை விவகாரத்தில், 6 மருத்துவமனைகள் ஏ.ஆர்.டி விதிகளை மீறி செயல்பட்டுள்ளன.

NEET தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை – நீதிமன்றம் முக்கிய அறிவிப்பு!

கருமுட்டை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து பூஸ்டர் தடுப்பூசி நாளை முதல் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்படும். தேவையான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. இதற்கான வழி காட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை என்றும் கூறினார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!