தமிழக அரசு பள்ளிகளில் LKG, UKG வகுப்புகள் மூடல் – கல்வித்துறை திடீர் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள 2,381 அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி நடத்தப்படாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தற்போது பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
LKG, UKG வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் ஆன்லைன் மூலமாகவும், அரசின் கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதனால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதே போல 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி முறை அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சரியத் தொடங்கியதும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டது. 2021 – 2022 ம் கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்ததால் பொதுத் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
Exams Daily Mobile App Download
அதன் படி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. தற்போது கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இனி 2022 – 2023 ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி நடத்தப்படாது என்று கூறப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் வகையில் கடந்த ஆட்சியின் போது அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!
இந்த வகுப்புகளுக்கு தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். அரசு எதிர்பார்த்த அளவு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்து வந்தது. வரும் கல்வி ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படாது என்ற தகவல் பரவி வருகிறது. இது குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு அரசுப் பள்ளிகளில், எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், 2,381 அங்கன்வாடிகளில் நடத்தப்பட்டு வரும் வகுப்புகள் மூடப்படும் என்ற தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளது.