தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் மூடல்? ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வலியுறுத்தல்!
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் அச்சம் காரணமாக தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டது. இதில் மாணவர்கள் அதிகளவு ஈடுபாடு கட்டாததால் கற்றல் திறன் குறைவதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர். இதற்கிடையில் அரசின் துரித நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஆயிரமாக குறைந்து உள்ளது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை வழங்கிய அரசு பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி நவ.1ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளில் நேரடி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பதி தரிசனம் செய்ய திட்டமிடுவோர் கவனத்திற்கு – டிக்கெட் முன்பதிவு! முக்கிய தகவல்!
இடையிடையே கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை சற்று தணிந்துள்ள நிலையில் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமிக்ரான் தொற்றின் காரணமாக 3வது அலை ஏற்படும் அச்சம் உருவாகி உள்ளது. இது வீரியம் மிக்கதாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் 3 மாநிலங்களில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. எனவே மீண்டும் ஊரடங்கு அமலாகி விடுமோ என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
TNUSRB தேர்வர்களின் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு..!
இதற்கிடையில் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் புதிய வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளன. 3வது அலை குழந்தைகளை அதிகம் தாக்கலாம் என கூறப்படும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை மூடி மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கலாம் என பெற்றோர்கள் சிலர் கோரி உள்ளனர்.