இன்று முதல் மத வழிபாட்டு தலங்கள், கடைகள் திறப்பு – கல்வி நிறுவனங்கள் மூடல்!

0
இன்று முதல் மத வழிபாட்டு தலங்கள், கடைகள் திறப்பு - கல்வி நிறுவனங்கள் மூடல்!
இன்று முதல் மத வழிபாட்டு தலங்கள், கடைகள் திறப்பு - கல்வி நிறுவனங்கள் மூடல்!
இன்று முதல் மத வழிபாட்டு தலங்கள், கடைகள் திறப்பு – கல்வி நிறுவனங்கள் மூடல்!

உத்தரபிரதேச மாநிலத்தின் கவுதம் புத்தா நகரில் கொரோனா ஊரடங்கில் இருந்து தளர்வுகளை அளிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன் படி கடைகள் மற்றும் சந்தைகள் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வுகள்

நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்து வருவதை தொடர்ந்து மாநிலங்கள் தோறும் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்திலும் கடந்த சில வாரங்களாக கொரோனா ஊரங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன் படி கவுதம் புத்தா நகரில் தினசரி திங்கள் கிழமை முதல் வெள்ளி கிழமை வரை, காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரை கடைகள் மற்றும் சந்தைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

இது தவிர வார இறுதியில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவு நாட்களில் பயிற்சி மையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தவிர அம்மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளுக்கு மட்டும் மேலும் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,

  • பயிற்சி மையங்கள், சினிமா அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கிளப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் சுழற்சி அடிப்படையில் இயங்கலாம்.
  • மேலும் அலுவலகங்களில் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக கோவில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை – அமைச்சர் உறுதி!

  • அதிகமான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காய்கறி சந்தைகள் திறந்த இடங்களில் செயல்படும். உணவகங்களிலிருந்து வீட்டு விநியோகம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • அதே நேரத்தில் தெருவோர கடைகள் குறிப்பிட்ட அளவு சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.
  • மத வழிபாட்டு தலங்களில் ஒரு நேரத்தில் ஐந்து பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • திருமண விழாவில் அதிகபட்சமாக 25 பேரும், இறப்பு நிகழ்வுகளில் 20 பேரும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
  • தனியார் துறை ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • ஆட்டோ, ரிக்ஷா போன்ற 3 சக்கர வாகனங்களில் இரண்டு பயணிகள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!