ஜூனியர் கிளர்க் தேர்வு திடீரென ஒத்திவைப்பு – வினாத்தாள் கசிவு விவகாரம்.. காவல்துறை நடவடிக்கை!
இன்று நடைபெற இருந்த ஜூனியர் கிளர்க் தேர்வு வினாத்தாள் குஜராத் மாநிலத்தில் கசிந்து உள்ளதால் தேர்வானது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வினாத்தாள் கசிவு:
குஜராத் மாநிலத்தில் ஜூனியர் கிளர்க் பதவியில் காலியாக உள்ள 1,181 பணியிடங்களுக்கான போட்டி தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. அதனைத் தொடர்ந்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. மொத்தமுள்ள 1,181 பணிடங்களுக்கு 9.5 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தேர்வானது ஜனவரி 29 ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது . அதன்படி இன்று (ஜன.29) காலை 2000க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற இருந்த இந்த ஜூனியர் கிளார்க் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தி அடைந்தனர்.
வினாத்தாள் கசிவு தொடர்பாக விசாரணை நடைபெற்ற போது காவல்துறையினருக்கு கிடைத்த தகவல் படி சந்தேகத்தின் அடிப்படையில் இஸாம் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து தேர்வின் வினாத்தாள் நகல் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டு இந்த ஜூனியர் கிளார்க் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.