தமிழக பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் நியமனம் – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!
தமிழகத்தில் 8ம் வகுப்பு வரையிலான அவர்களுக்கு பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிக்க ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
தூய்மை பணியாளர்கள்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களுக்கு கொரோனா தாக்கி வந்த நிலையில் விடுமுறை வழங்கப்பட்டு சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், டியூசனுக்கு தடை – மன அழுத்தத்தை போக்க புதிய சட்டம்!
9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து வெளியான செய்திக்குறிப்பில் நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது பள்ளிகள் திறப்பதை தொடர்ந்து சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமிக்க வேண்டும் என ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
PhonePe மூலம் மொபைல் ரீசார்ஜ் செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் – பயனர்கள் அதிர்ச்சி!
இது குறித்து அளிக்கப்பட்ட மனுவில், மாநகராட்சிக்கு உட்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே மாநகராட்சி மூலம் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மைப் பணியை மேற்கொண்டு வந்தது. கடந்த 19 மாதங்களாக பள்ளிகளில் மாணவர்கள் வருகை இல்லாத காரணத்தினால் பணியாளர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.