நாடு முழுவதும் மே 9 இல் சட்ட நுழைவுத்தேர்வு – விண்ணப்பிக்க மார்ச் 31 கடைசி நாள்!!
நாடு முழுவதும் செயல்படும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதை போன்று தேசிய சட்டக்கல்லூரிகள் மற்றும் 22 பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பிறகாக சேர கிளாட் (CLAT) எனும் சட்ட நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். தற்போது நடப்பு கல்வியாண்டிற்கான விண்ணப்பம் மற்றும் தேர்வு தேதி குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
சட்ட நுழைவுத்தேர்வு:
முதுகலை சட்டப் படிப்பில் சேர, எஸ்சி & எஸ்டி வகுப்பினர் குறைந்தபட்சம் 45% மற்றும் பிற வகுப்பினர் 50% மதிப்பெண்களை சட்ட இளங்கலை பட்டப்படிப்பில் பெற்றிருக்க வேண்டும். இதற்கு வயது வரம்பு கிடையாது. இளங்கலை சட்டப் படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்சி & எஸ்டி மாணவர்கள் 40% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.
நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகள் திறப்பு – 69% பெற்றோர்கள் ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்!!
இதற்கான வயது வரம்பு 22 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேற்கூறிய தகுதி உடைய மாணவ, மாணவிகள் சட்ட நுழைவுத்தேர்வு (CLAT) எழுத விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி தேதி மார்ச் 31 ஆகும். தேர்வெழுத விரும்புபவர்கள் consortiumofnlus.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணைய பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க மறுப்பு!!
இத்தேர்வு நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் வரும் மே மாதம் 9ம் தேதி நடைபெற உள்ளது. கிளாட் தேர்வில் சட்ட அறிவு, பொது அறிவு, பகுப்பாய்வு திறன், நடப்பு நிகழ்வுகள், ஆங்கில அறிவு, கணக்கு ஆகிவற்றை அடிப்படையாக கொண்ட வினாக்கள் இடம் பெற்று இருக்கும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்