தமிழகத்தில் செப். 1 முதல் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் துவக்கம்? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்று சூழ்நிலையை பொறுத்து வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்கப்படும் எனவும், வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நெடு நாட்களாக நீடித்து வந்த சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதத்தில், வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அந்த வகையில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டுமாக துவங்க வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கடைகளில் ஸ்டாக் உள்ள பொருட்களின் விபரம்!
இதனிடையே செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டால் மாணவர்கள் சுழற்சி முறையில் வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அவ்வாறு பள்ளிகள் திறக்கப்பட்டால் முதலில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வார்கள். மேலும் இம்மாணவர்கள் 50% என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள். அதன் படி ஒரு வகுப்பில் சுமார் 40 மாணவர்கள் இருந்தால், அவர்கள் 20 – 20 பேராக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு வெவ்வேறு நாட்களில் பாடங்கள் நடத்தப்படும். இது தொடர்பான நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்’ என தெரிவித்துள்ளார்.