தமிழக பள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்புகள்? கல்வி அலுவலர் எச்சரிக்கை!
தமிழகத்தில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு வகுப்பு:
தமிழகத்தில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்கள் வீட்டில் இருந்து தான் கல்வி கற்றனர். இந்த ஆன்லைன் கற்றல் முறை எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கவில்லை மாறாக கற்றல் இடைவெளியை அதிகப்படுத்தியது. அதனால் விரைந்து பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து கொரோனா பாதிப்புகள் சற்று குறைய ஆரம்பித்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது விடுமுறை காலத்தை ஈடு செய்யும் வண்ணம் சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடத்தப்பட்டது.
மேலும் மேல்நிலை வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களில் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டு கற்றல் இடைவெளி சரி செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் தாமதமின்றி சரியான நேரத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாட்கள், சனி, ஞாயிறன்று சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்களை வரவழைத்து வகுப்புகள் நடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.23) மின்தடைக்கான பகுதிகள் – மின்சாரவாரியம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் காலை 7.30 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தபடுவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொடர் வகுப்புகளால், மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பள்ளி முதல்வர்கள் கூட்டத்தில் மெட்ரிக் பள்ளி இயக்குனர்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Keren school, K. Puliyangulam, near Madurai Kamaraj University runs schools on all saturdays