தமிழக பள்ளிகளில் ஷிப்டு முறையில் வகுப்புகள்? முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து பரிசோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி ஷிப்டு முறையில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
ஷிப்டு முறையில் வகுப்புகள்:
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பெரும்பாலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கி இருந்தது. இதனிடையே ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து, கொரோனா 4வது அலை தொடங்கி உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் பரவல் உச்சம் தொட்டு உள்ளது. மேலும் பொது இடங்கள் மற்றும் நெரிசலான இடங்கள் மற்றும் மருத்துவமனைகளில் மக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரித்து உள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது, இதனால் மாணவர்கள் நலன் கருதியும் பள்ளிகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மாணவர்கள் கொண்ட தனியார் பள்ளிகளில் வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் நெருக்கமாக அமர வேண்டிய நிலை உள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது காலை-மாலை என 2 ஷிப்டாக வகுப்புகளை நடத்தலாமா? என தனியார் பள்ளிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
இது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்கப்படுகிறது. மேலும் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளை தவிர மற்ற வகுப்பு மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று தனியார் பள்ளி நிர்வாகிகள் கருதுகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் கருத்துக்களை கேட்டு உடனடியாக நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.நந்தகுமார் கூறியது, தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஒருநாள் விட்டு ஒருநாளாகவோ, காலை மற்றும் மாலை ஷிப்டு முறையிலோ வகுப்பு நடத்தலாமா? என பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுப்பு – பருவமழை எதிரொலி!
மாணவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டால் பள்ளி முழுமையாக மூட வேண்டிய நிலை வரும். இதனால் முன் எச்சரிக்கையாக தொற்று குறையும் வரை மாணவர்களை பாதியாக குறைத்து வகுப்புகளுக்கு வர வைப்பது பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்டு முடிவு செய்யலாம் என கூறப்பட்டு உள்ளது. மேலும் அரசின் உத்தரவை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார்.