தமிழகத்தில் மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகள்? கொரோனா பரவல் எதிரொலி!
தமிழகத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் பாதிப்புகளுக்கு மத்தியில் பள்ளிகளில் மீண்டும் சுழற்சி முறைகள் வகுப்புகளை துவங்குவது குறித்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சுழற்சி முறையில் வகுப்புகள்
இந்தியாவில் தற்போது கொரோனா 4ம் அலைப்பரவல் பாதிப்புகள் தீவிரமடைய துவங்கி இருக்கிறது. அதன்படி நாடு முழுவதும் தினசரி பதிவு செய்யப்பட்டு வரும் புதிய பாதிப்புகள் தற்போது 30 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கூட கடந்த ஒரு சில வாரமாக அதிகரித்து வரும் புதிய பாதிப்புகள் இப்போது 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் குறிப்பாக திருவள்ளூர், காஞ்சீபுரம், கோவை, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று கணிசமாக அதிகரித்து கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் உச்சம் தொட்டு பின்னர் குறையத்துவங்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த சூழலில் பள்ளி மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் கடந்த நாட்களில் ஏற்பட்ட கொரோனா பேரலையின் போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தது. இப்போது மீண்டுமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த புதிய தொற்றுகளால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்களோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு – சுகாதாரத்துறையின் ரிப்போர்ட்!
அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பள்ளிகளை சுழற்சி முறையில் நடத்துவது குறித்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, தனியார் பள்ளிகளை காலை, மாலை என இரு வேளைகளிலும் சுழற்சி முறையில் நடத்துவது அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வகுப்புகளை நடத்துவது குறித்து பள்ளி நிர்வாகங்கள் ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் பெற்றோர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு இது குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.