தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – நாளை (நவ. 2) வெளியீடு!
தமிழகத்தில் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக். 10 ஆம் தேதி தனித்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை (நவ 2) மதியம் 12 மணிக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருப்பதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திய மாணவர்களும், ஒரு சில காரணங்களால் பள்ளிக்கு சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் மூலமாக தனியாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் வெளியிட்டது. அதன் படி 2022 ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அக். 10 ஆம் தேதி முதல் அக். 14 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
ஜாம்ஷெட் ஜே இரானி காலமானார் – இந்தியாவின் எஃகு மனிதர்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் திட்டமிட்டபடி 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்கள் காத்திருக்கும் நிலையில் அது குறித்த அறிவிப்பை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் நாளை (நவ. 2) மதியம் 12 மணிக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் அதிகாரபூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள தேர்வு பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து முடிவுகளை பார்க்கலாம்.