ஜூலை 31க்குள் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியீடு – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா 2ஆம் அலை காரணமாக மாநிலங்கள் தோறும் ரத்து செய்யப்பட்டுள்ளதான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுத்தேர்வு முடிவுகள்
நாடு முழுவதும் கொரோனா பரவலின் தாக்கமானது தீவிரமடைந்து வந்ததால், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதாவது கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றானது பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு பள்ளிகள் அனைத்தும் கடந்த ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் ஜூன் 26 முதல் ரயில் சேவை தொடக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இதற்கிடையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக, பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளானது சில பாடங்களுக்கு மட்டும் நடத்தப்படவில்லை. அதே போல இந்த ஆண்டும், கொரோனா 2 ஆம் அலையால் ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு என அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய கல்வி வாரியத்தின் (CBSE) 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் CBSE தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையானது நீதிபதி ஏ.எம்.கான்வீல்கள் அமர்வில், உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின் போது, கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வழங்கும் முறையை 10 நாளைக்குள் உருவாக்க வேண்டும். அந்த மதிப்பெண்களை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்’ என ஒவ்வொரு மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.