தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீடு முறை – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து நிலை மாணவர்களும் திருப்தியடையும் வகையில் பிளஸ் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
12 ஆம் வகுப்பு மதிப்பெண்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் கட்டுப்பாடு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டன. நிலைமை மோசமானதால் மாணவர்களுக்கு நேரடியாக தேர்வுகள் நடத்த முடியாது. எனவே 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டது.
கொரோனாவால் ரூ.2 லட்சம் கோடி பொருளாதார இழப்பு – ரிசர்வ் வங்கி அறிக்கை!
12 ஆம் வகுப்பு மதிப்பெண் உயர்கல்விக்கு தேவையானது என்பதால் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடத்தப்படாததால் 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் தேர்ச்சி என பதிவிட்டு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு அனைத்து நிலை மாணவர்களுக்கும் திருப்தி அடையும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பள்ளிகள் கல்விக் கட்டணமாக 75 சதவீத தொகையை 2 தவணைகளாக வசூலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.