தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – நாளை ஆலோசனை!!

0
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நாளை ஆலோசனை!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - நாளை ஆலோசனை!!
தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – நாளை ஆலோசனை!!

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து நாளை மாலை கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்காத காரணத்தினால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் தேர்வு நேரடியாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதே போல பல மாநில அரசுகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து காவலர்களுக்கும் ரூ.5000 ஊக்கத்தொகை – முதல்வர் அறிவிப்பு!

இதனால் தமிழகத்திலும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தேர்வை நடத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று நாளை மறுநாள் முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!