தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ரத்து – அரசுக்கு வலியுறுத்தல்!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஆண்டை விட தற்போது கொரோனா நோய்த்தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக தற்போது பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பள்ளி (12ம் வகுப்பு தவிர்த்து) மற்றும் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 3ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதற்கான அனைத்து பணிகளும் மிக தீவிரமாக இருந்து வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில் பொதுத்தேர்வை நடத்தவுள்ளதால் பலரும் இதனை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் 12ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கட்டாயமான முறையில் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. தற்போது இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – கல்வி வாரியத்திடம் வலியுறுத்தல்!!
அதன்படி அவர் கூறியதாவது, கொரோனா பரவலுக்கு மத்தியில் தமிழகத்தில் பொதுத்தேர்வுகளை நடத்துவது மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். தேர்வுகள் எனப்படுவது மாணவர்களின் மனநிலை சம்மந்தப்பட்டவை. எனவே அவர்கள் எந்த ஒரு சிரமமுமின்றி தேர்வுகளை எழுத வேண்டும். எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் 12ம் வகுப்பிற்கான பொதுத்தேர்வினை ரத்து செய்து கடந்த வருட மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.