மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வுகள் – அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
குடிமைப் பணி தேர்வுகள்:
ஒவ்வொரு ஆண்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப் பணி (சிவில் சர்வீசஸ்) தேர்வுகள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் உட்பட பல மத்திய அரசு தேர்வுகள் கூட ரத்து செய்யபட்டுள்ளன.
தமிழக 16வது சட்டசபை கூட்டத்தொடர் – 24ம் தேதி வரை நடத்த முடிவு!!
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக குடிமைப்பணி தேவைகள் ஜூன் 27 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிலைமை சரி இல்லாத காரணத்தால் மீண்டும் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் கொரோனா காரணமாக முதல்நிலைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இறுதியாக அக்டோபர் 4 அன்று நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த ஆண்டு முதல்நிலை தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் இந்த தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.