தமிழகத்தில் ஜூன் 21ம் தேதி முதல் நகர பேருந்துகள் இயக்கம் – அரசு திட்டம்!
தமிழகத்தில் வரும் ஜூன் 21ம் தேதி முதல் நகர பேருந்துகள் இயக்க திட்டமிட்டிருப்பதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடந்த மே 10ம் தேதி முதல் அமலில் இருந்து வருடுகிறது. தற்போதைக்கு ஜூன் 21ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மேலும் சில தளர்வுகளை அரசு அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் மே 10ம் தேதி முதல் மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக பேருந்துகள் அனைத்தும் செயல்படாமல் இருந்தது. தற்போது வரும் திங்கள் கிழமை முதல் பாதிப்புகள் குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் மாவட்டத்திற்குள் நகர பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
உலகிலேயே மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு – ஏலம் விட முடிவு!
பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக உள்ள மாவட்டங்களில் பேருந்து இயக்கம் அனுமதிக்கப்படாது. இதனால் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை பணியாளர்களான டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள், அனைத்து பணிமனைகளில் உள்ள பேருந்துகளையும் கிருமி நாசினி மூலம் சுத்தப்படும் பணிகள் நடைபெறுகிறது. முதலில் ஒரு வாரத்திற்கு 50% பஸ்கள் மட்டுமே இயக்கப்படும். அதன் பின்னர் மக்களின் தேவைக்கேற்ப எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
TN Job “FB Group” Join Now
மொத்தம் 24,000 ஊழியர்களில் 60% பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். பணிக்கு செல்லும் பொதுமக்கள் பேருந்துகள் இல்லாத காரணத்தால் ஆட்டோக்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்கின்றனர். அரசு பேருந்துகளை இயக்கினால் மட்டுமே சாதாரண மக்களுக்கு உதவியாக இருக்கும். அதனால் தான் அரசு முதல் கட்டணமாக மாநகர பேருந்துகளை மட்டும் 40 நாட்களுக்கு இயக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.