Citibank வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – இணைய சேவைகள் நிறுத்தம்! முழு விபரம் இதோ!
சிட்டி வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் அக்டோபர் 16 காலை 9:30 மணி முதல் அக்டோபர் 17 காலை 6:30 வரை செயல்படாது என்று வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இணைய சேவைகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக வங்கி சேவைகள் அதிக அளவில் ஆன்லைன் முறையில் தான் செயல்படுத்தப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. ஆன்லைன் சேவை மூலமாகவே தங்களது பரிவர்த்தனைகளை செய்து கொள்கின்றனர். இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள வங்கி நிறுவனமான சிட்டி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன்படி, வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கு இடையில் இரவில், சிட்டி வங்கி நெட் பேங்கிங் செயல்படாது. அதவாது, சிட்டி பேங்க் கணக்கு வாடிக்கையாளர்கள் சில மணிநேரங்களுக்கு இணைய வங்கி, வாலட் மற்றும் ஆர்டிஜிஎஸ் ஆகிய எந்த வித பரிவர்த்தனையும் செய்ய முடியாது. பராமரிப்பு பணிகள் காரணமாக குறைந்தது 9 மணி நேரங்கள் ஆன்லைன் சேவைகள் செயல்படாது. அதாவது, சிட்டி வங்கியின் ஆன்லைன் வங்கி சேவைகள் அக்டோபர் 16 காலை 9:30 மணி முதல் அக்டோபர் 17 காலை 6:30 வரை செயல்படாது.
விவரங்கள்:
- அக்டோபர் 17 அன்று, அதிகாலை 1 மணி முதல் 2 மணி வரை, web and mobile services சேவைகள் கிடைக்காது.
- அக்டோபர் 17 அன்று அதிகாலை 2:30 முதல் காலை 6:30 வரை ஆர்டிஜிஎஸ் சேவைகள் கிடைக்காது.
- அக்டோபர் 16 காலை 9:30 மணி க்டோபர் 17 ஆம் தேதி காலை 12:30 மணிக்கு இடையில் IVR சுய சேவை கிடைக்காது.
- அக்டோபர் 16 காலை 9:30 மணி அக்டோபர் 17 ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு இடையில் கிரெடிட் கார்டு சேவைகள் கிடைக்காது.