ஒரே சமயத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட 4000 ஊழியர்கள்.. செக் வைத்த உலகின் முன்னணி நிறுவனம்!
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ தனது வர்த்தகத்தை மறு சீரமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதில் ஒன்றாக ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
பணி நீக்கம்:
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவிய கொரோனா பெருந்தொற்று பெறும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து நாடுகளும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. இதன் காரணமாக தொழில் துறைகள் கடும் சரிவை சந்தித்தது. இதிலிருந்து மீள்வது நிறுவனங்களுக்கும், நிறுவன ஊழியர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வந்தது.
Exams Daily Mobile App Download
கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்ததும் மீண்டும் நிறுவனங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. குறிப்பாக ஐடி துறை எதிர்பாராத அளவு வளர்ச்சி அடைந்தது. இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக உலகம் முழுவதும் நிலவும் பொருளாதார மந்த நிலை காரணமாக மீண்டும் தொழில்கள் பின்னடைவை சந்தித்தது. இந்த நேரத்தில் நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கில் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்களுக்கு ஹாப்பி நியூஸ் – தங்கும் விடுதி கட்டும் பணிகள் தீவிரம்!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அந்த வரிசையில் தற்போது சிஸ்கோ நிறுவனமும் இணைந்து விட்டது. இந்நிறுவனம் வர்த்தகத்தை மறுசீரமைக்கும் நோக்கில் 4,000 பணியாளர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது மொத்த ஊழியர்களில் 5% ஆகும். இந்நிறுவனம் உலகளவில் 83,000 பணியாளர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் முதலீடுகளை விரிவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.