ஜூன் 26 வரை பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் – CISCE & CBSE நிர்வாகம் முடிவு!
மேற்கு வங்க மாநிலத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் ஜூன் 26 வரை ஆன்லைன் முறைக்கு மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில், பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை முடிவடைந்து இப்போது புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் மேற்கு வங்க மாநிலத்தில் நிலவி வரும் அதிகளவு வெப்பநிலை சூழலை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கான கோடை விடுமுறையை நீட்டிப்பதாக அரசு அறிவித்தது. அந்த வகையில் இப்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் விடுமுறையை நீட்டித்துள்ள நிலையில் CISCE மற்றும் CBSE வாரியங்களுடன் இணைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பள்ளிகள் மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாற்றியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் நேற்று (ஜூன் 14) முதல் மாணவர்களுக்கான நேரடி வருகையை நிறுத்திய CISCE மற்றும் CBSE பள்ளி நிர்வாகங்கள் ஜூன் 26 வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தெரிவித்துள்ளது. இப்போது மாநிலக் கல்வித்துறையின் உத்தரவின் பேரில் அனைத்து மத்யமிக் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும், பல்வேறு வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக மற்ற கல்வி வாரியங்களின் பள்ளிகள் முழு அளவிலான ஆன்லைன் வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளன.
மூர்த்தி நிலைமையை சொன்ன கண்ணன், அதிர்ச்சியில் ஐஸ்வர்யா மீனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
குறிப்பாக, கடந்த மே மாதம் கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவித்ததால் கிட்டத்தட்ட பதினைந்து வேலை நாட்களை இழந்துள்ளதாக இந்த நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி கடந்த ஜூன் 13ம் தேதியன்று கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. இதற்கிடையில் மாநிலத்தில் நிலவி வந்த வெப்ப அலை தாக்கத்தால் சில உயிரிழப்புகள் ஏற்பட்டதை தொடர்ந்து, பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி கோடை விடுமுறையை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிக்க அரசு முடிவு செய்தது.